Thursday, September 8, 2011

மறக்கமுடியவில்லை













அவளை மறந்துவிடு
நீ எளிதாய் சொல்லிவிட்டாய்,
கண்ணில் குடியிருந்தாலும் கூட
மறக்க முற்சித்திருந்திருப்பேன்
நெஞ்சில் நீங்காமல் நிறைந்திரு
க்கிறாளே
நான் என்செய்வேன் ???

Tuesday, September 6, 2011

டெட்டி பியர்
























அவளுக்கு முன்பே பிறந்தேன்
எதோ ஒரு நம்பிக்கையில்
எங்கோ ஒரு மூலையில்
உயிரற்றவனாய்
அவளுக்கென காத்துக்கிடந்தேன்
அவளை சேர்ந்த பின்தான்
சவமாய் கிடந்தவன்
சுவாசம் பெற்றேன் .....

படைத்தவரை கண்டதில்லை,

நான் கண்ட
முதல் தெய்வம் அவள்
எனக்கு சோறூட்டி
தாலாட்டு பாடி
எனக்கு முன்பே தூங்கிப்போகும்
வினோத தாய் அவள் .
பேணிக்காப்பதில்,
பாசமிகு தந்தை அவள் .
விளையாடும் போது
விளையாட்டுக்காய் நான் அழுதாலும்,
என்னை தேற்றும் தங்கை அவள்
தோள் கொடுப்பானாம் தோழன் ,
எனக்கோ நல்ல தோழி அவள் .

அவளிடம் எனை சேர்க்க

எனக்காய் அவளை பெற்றவர்
மட்டுமே என் உறவு
அவள் வசிக்குமிடமே
என் மாளிகை

மகிழ்ச்சியோ, துக்கமோ,

சிரிப்போ, அழுகயோ,
என்னிடம் மட்டுமே
பகிர்ந்து கொள்ளப்பழகிய
வெகுளிப்பெண் அவள் .

அவள் துக்கத்தில் நான்

துவண்டு போகிறேன்
அவள் சிரிப்பில் நான்
சிதறிப்போகிறேன்
மொத்தத்தில் அவள் 
வாழ்க்கையில் கலந்துபோகிறேன்
இந்த சந்தோஷத்தில்
காற்றில் பஞ்சாய்
பறந்து போகிறேன் ...

என்னை கட்டி அணைத்தபடி

அவள் உறங்க
என் கண்களில்
கனவுகளுக்கும் இடப்பற்றாக்குறை

இதில் நம்பிக்கையில்லை எனினும்

அவள் முகத்தில் நான்
விழிக்கவே நாளெல்லாம்
இரவெல்லாம் விழித்திருக்கிறேன்

என் நாட்கள் இனிதாவது

அவள் முகத்தில் முழிப்பதால் தானோ ??
அவள் ராசிக்கு  சொன்ன
பலனும் பலிப்பது  எனக்குதானோ ??

சில நொடி பிரிந்தாலும்

என் கருவிழிகள்
கண்ணீரில் மூழ்கி சாகின்றது ..

என் வாழ்வின்

எல்லா நாளிலும்
வேண்டும் அவளது கேர்
இருந்திருந்தால்
கொடுத்துவிடுவேன் உயிர்

இப்படிக்கு

என்றும் என்றென்றும்
அவளுடைய
டெட்டி பியர் (Teddy Bear)..