Sunday, July 31, 2011

என்னவளுக்காக

கவிதை கொட்டுகிறதே கவியரசு ஆனாயோ ??
காதல் பிறந்ததோ ??
கிண்டலாய் கேட்டாள்  அவள்
சிரித்துவிட்டு சொன்னேன்
எனது கவிதையாய்
எனது காதலியாய்
என் கவிதையின் வாசகியாய்
நீ கிடைப்பாயெனில்
கவிதையில் மட்டுமல்ல
காதலிலும்
பேரரசும் ஆவேன்

Tuesday, July 19, 2011

சுகமான சுமைகள்
















சுமையான  சீனியையே
எறும்பு சுகமாய்  சுமக்குமாயின்
சுகமான உன் நினைவுகளை
என் நெஞ்சம்  சுமையாய்

நினைக்குமோ ???
 

கவிதைக்குள் ஹைக்கூ
















"தேனே பூ கொடுக்கிறது
நீ தந்த ரோஜாப்பூ..."

என்னவள் சொன்ன ஹைக்கூ
இதுவே இதன் சிறப்பு

Friday, July 15, 2011

மழைத்துளி
















மழைத்துளி
சிப்பிக்குள் விழும்போது
மட்டுமல்ல
உன்மேல் படும்போதும்
முத்தாகிறது...