Sunday, April 6, 2014

தேவை





















அள்ளிக்கொடுக்க வேண்டாம்
கிள்ளியாச்சும் கொடு
அத்தியாவசமாய், அவசரமாய்
அவசியமாய் எனக்கு
தேவைபடுகிறது, அருகாமையில்
உன் அன்பும், நிரந்திரமாய்
நிலைத்திருக்கும் உன் நட்பும்

வாசகர்













அன்று வெற்று காகிதமாய், 
வெள்ளைத்தாளாய்  இருந்த என்
மனதில் அறிந்தோ அறியாமலோ
காதல் என்ற வார்த்தையை
முதல் வரியாய்  கிறுக்கிச்சென்றாள்
என்னுடைய என்னவள்

முதல் கோணல் முற்றிலும் கோணல்
என்பதாய், எழுதிய அவளே விட்டுச்சென்ற
பின்பும்,  நானே முயன்றும் கூட
இந்நாள் வரையில் சரிசெய்ய முடியாத
நிலையில் நிலைத்துவிட்டது 
என் வாழ்க்கை கட்டுரை

இதனால் தானோ என்னமோ
திறந்த புத்தகமாய் வாழும் என்னை
சிலர் படிக்க முயல்வதும் இல்லை
படித்தவர்கள் புரிந்து கொள்வதுமில்லை

நட்புடன் என்னை  வாசிக்கும்
வாசகர்களுக்காய் காத்திருக்கிறேன் 
காரணம் எழுதியவனுக்கும் புரியாமல்
போனது படிப்பவனுக்கு புரியும்
விந்தை தான் நட்பு

எழுதியது காதலோ, கடவுளோ
கோணளாகி போன
என் வாழ்க்கையை என் நட்பு தான்
புரிந்துகொள்ளும், சீர்படுத்தும் என்ற
நம்பிக்கையுடன் நான்...